குறுந்தொகை: பாடல் 323

குறுந்தொகை 323 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

எல்லாம் எவனோ? பதடி வைகல்-

பாணர் படுமலை பண்ணிய எழாலின்

வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,

பெய்த புலத்துப் பூத்த முல்லைப்

பசு முகைத் தாது நாறும் நறு நுதல்

அரிவை தோள்-அணைத் துஞ்சிக்

கழிந்த நாள் இவண் வாழும் நாளே.

வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது.

பதடி வைகலார்

எல்லாம் - தலைவியுடன் வாழாத நாள்

எவனோ - என்ன பயன்(வினா)

பதடி - பதர்,பொக்கு

வைகல் - நாள்

படுமலை - படுமலைப் பாலைப் பண்

எழாஅல் - ஓர் இசைக் கருவி

அஞ்சுவர (அம்+சுவல்) - மேலிடம் (இசையில் கீழ் ஓசை,நடுவண் ஓசை, மேல் ஓசை ஆகிய மூன்றனுள் மேலோசை)

வீழ - பரவ

பசு முகை - அன்றலர்ந்த மலர்

தாது - மகரந்தப் பொடி,மகரந்தத் தூள்

நாறும் - மணக்கும்

பாலை

--------------

1.செம் பாலை,2.படு மலைப் பாலை, 3.செவ்வழிப் பாலை, 4.அரும் பாலை,5.கோடிப் பாலை,6.விளரிப் பாலை, 7.மேற் செம் பாலை

அடியார்க்கு நல்லார் உரை

பாட பேதம்

--------------------

அஞ்சுவர / எடுஞ்சுவர,எழுஞ்சுவர

தோள் அணை/தோள் இணை

ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,/

கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,/

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;/

நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,/

பஞ்சி வெண் திரிச் செஞ் சுடர் நல் இல்/

பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ/

அன்னை முயங்கத் துயில் இன்னாதே(குறுந்.353)

பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கள் பதடி எனல்.(குறள்.196)

படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு/

எழீஇ அன்ன உறையினை முழவின் (நற்.139:4-5)

நன்றி - http ://tamil concordance.in