குறுந்தொகை: பாடல் 324

குறுந்தொகை 324 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை

வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,

இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்

நயன் உடைமையின் வருதி; இவள் தன்

மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,

கவை மக நஞ்சு உண்டாஅங்கு,

அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரா வாராவரைவல்'' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது.

கவைமகன்

கோள் வல் ஏறு - கொல்லும் வலிமை பெற்ற முதலை

ஏறு - ஆண் முதலை

வழி வழக்கு - வழிச் செல்லுதல்

அறுக்கும் - இல்லை ஆக்குதல்

உவக்கும் - மகிழும்

கவை மக - இரட்டைக் குழந்தைகள்

கருங் கல் கான் யாற்று அருஞ் சுழி வழங்கும்/

கராஅம் பேணாய் இரவரின்/

வாழேன் ஐய! மை கூர் பனியே! (நற்.292:7-9)

நன்றி - http ://tamil concordance.in