குறுந்தொகை: பாடல் 325
குறுந்தொகை 325 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
''சேறும் சேறும்'' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, ''மருங்கு அற்று
மன்னிக் கழிக'' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.
நன்னாகையார்
சேறும் - செல்வேன்
மாயம் - பொய்
செத்து - கருதி
மருங்கு -பக்கம்
அற்று - நீங்கி
மன்னிக் கழிக - நிலையாகக் கழிக
அன்னோ - அந்தோ
ஆசு - பற்றுக் கோடு
