குறுந்தொகை: பாடல் 326

குறுந்தொகை 326 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்

கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த

சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-

ஒரு நாள் துறைவன் துறப்பின்,

பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே.

சிறைப்புறம்.

துணைத்த - சேர்த்துக் கட்டப்பட்ட

கோதை - மலர்மாலை

பணை - மூங்கில்

மகளிர் - ஆய மகளிர்

சிறு மனை - சிறு வீடு,சிறிய இல்

தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்/

சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்/

வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது/

இருந்தனம் ஆக எய்த வந்து/

தட மென் பணைத் தோள் மட நல்லீரே (அகம்.110:6-10)

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(குறள்.1269)

நன்றி - http ://tamil concordance.in