குறுந்தொகை: பாடல் 327
குறுந்தொகை 327 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று'' என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும், நன்றும்
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், ''இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்'' என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.
அம்மூவன்
நயன் - அன்பு
நன்று - பெரிது
நிலை - தன்மை
கழுழ்/கழுலி - வெள்ளம்
சிலம்பு - மலை
புல்லென - பொலிவு அழிய
ஆல்,ஏ - அசை நிலைகள்
ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்/
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ. (கலி.5:14-15)
நன்றி - http ://tamil concordance.in
