குறுந்தொகை: பாடல் 331
குறுந்தொகை 331 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
வாடாப் பிரமந்தன்
கழை - மூங்கில்
திரங்கிய - வற்றி, உலர்ந்த
ஆர் -அரிய
கடறு - காடு
கூட்டுண்ணும்- கொள்ளையிட்ட பொருளைப் பிரித்து உண்ணுதல்
கடுங்கண் - தறுகண் அஞ்சாமை,வீரம்
நீந்தி - கடத்தல்,கடந்து
...................... நம்மினும்
பொருளே காதலர் காதல் (அகம்.53:14-15)
கடுங்கண் யானைக் கானம் (குறுந்.331:4)
கையுடை நன்மா (குறுந்.319:3)
செய் பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்(நற்.214:8)
நன்றி - http ://tamil concordance.in
