குறுந்தொகை: பாடல் 332

குறுந்தொகை 332 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,

நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து

கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்

மடப் பிடி தழீஇத் தடக் கை யானை

குன்றகச் சிறுகுடி இழிதரும்

மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?

வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.

மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

பெயல் - பெய்தல்,மழை

நோய் - காம நோய்

தழீஇ - தழுவி

நண்ணிய - பொருந்திய