குறுந்தொகை: பாடல் 333
குறுந்தொகை 333 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?
''அறத்தோடு நிற்பல்'' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.
உழுந்தினைம் புலவன்
குறும் படை - குறிய படை
பகழி - அம்பு
கொடு வில் - வளைந்த வில்
குறும் பொறை - குறிய பொற்றை மலை
அணவுதல் - நிமிர்ந்து நோக்குதல்
பணிக் குறை - வினைக் குறை
துணியின் - துணிந்து
மறை - களவு மணம்
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை (246:1,313:1 )
