குறுந்தொகை: பாடல் 335

குறுந்தொகை 335 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்

இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்

சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,

பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்

வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்

வல் விற் கானவர் தங்கைப்

பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.

இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

நிரை - நிரல் , வரிசை

நேர் இழை - நுட்ப மிக்க வேலைப்பாடு பெற்ற அணிகலன்

இருங்கல் - பெரிய கல்

வியல் அறை - அகன்ற பரப்பு,வெளி

சினை - கொம்பு, மரக்கிளை

வார் கோல் - நீண்ட அம்பு

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை

(குறுந். 392:5)

உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை

(சிறுபாண். 190)

கொலை வில் எயினர் தங்கை (ஐங். 363:2)

வல் வில் கானவர் தங்கை (குறுந். 335:6)

வால் நிணப் புகவின் கானவர் தங்கை

(அகம்.132:5)

தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் (அகம்.320:3)

ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசை கொளீஇ/

திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்/

தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்/

விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்(அகம்.320:1-4)

நன்றி - http ://tamil concordance.in