குறுந்தொகை: பாடல் 336

குறுந்தொகை 336 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,

ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-

சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்

கடு மா நெடுந் தேர் நேமி போகிய

இருங் கழி நெய்தல் போல,

வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே.

தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.

குன்றியன்

செறுவர் -பகைவர்

தேம் - தேன்

தேம் பாய் துறைவ - இனிய செய் இயல்பு

கடுமா - விரை குதிரை

விளரி - பண்

இசின் - அசைநிலை

பாணர் படுமலை பண்ணிய எழாலின்/

வானத்து அஞ்சுவர நல் இசை வீழ(குறுந்.323:2-3)

நன்றி - http ://tamil concordance.in