குறுந்தொகை: பாடல் 340
குறுந்தொகை 340 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.
அம்மூவன்
கடைதல் - மிகுதல்
அவர்ப் புலம்பி - அவர் திறத்து வருந்தி
ஒரு பாற் படுதல் - ஒரு வழி நிற்றல்
ஆயிடை - அவ்விடை (இரண்டுக்கும் இடையில்)
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு.(குறள்.1292)
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.(குறள்.1293)
அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே/
நீஎமக்கு ஆகா தது (குறள்.1291)
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.(குறள்.1284)
நன்றி - http ://tamil concordance.in
