குறுந்தொகை: பாடல் 343

குறுந்தொகை 343 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்

அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-

மிகு வலி இரும் புலிப் பகுவாய் ஏற்றை-

வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்

கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை

வாடு பூஞ் சினையின், கிடக்கும்

உயர் வரை நாடனொடு பெயருமாறே.

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

ஈழத்துப் பூதன் தேவன்

கவுள் - யானையின் கன்னம்

அண்ணல் - தலைமைப் பண்பு

பகு வாய் - பிளந்த வாய்

ஏறு - ஆண் புலி

மறு - கறை

கொளீஇய - கொண்டது

விடர்முகை - மலைப் பிளவு, குகை

பெயருமாறே - பெயரும்+ஆறு(வழி)+ஏ

பெயர்தல்,நகர்தல்,இடப் பெயர்வு

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்/

இரும் புலிக் குருளையின் தோன்றும் (குறுந்.47:1-2)

நன்றி - http ://tamil concordance.in