குறுந்தொகை: பாடல் 345
குறுந்தொகை 345 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி ''இரா வா'' என்றது.
அண்டர் மகன் குறுவழுதி
இழை - தேருக்குரிய ஒப்பனைப் பொருள்,அணி
இயல் வருதல் - இயங்குதல்
கொடுஞ்சி - தேரின் உறுப்பு
மருள் - உவம உருபு
அசைஇ - இளைப்பாறி
தகைய - மதிப்பு,தகுதி,தகைமை
புலம்பு -தனிமை
தைஇய- பொருந்தி, தழுவி
இழும் - ஒலிக் குறிப்புச் சொல்
பெரு நீர் - பெருங்கடல்
