குறுந்தொகை: பாடல் 346
குறுந்தொகை 346 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது.
வாயில் இளங்கண்ணன்
நாகுபிடி - ஒரு பொருட் பன்மொழி
நயந்த - விரும்பிய
முளை - மூங்கில் முளை
போழும் - ஊடுறுவும்
தொடலை - மாலை
ஓப்பி - ஓட்டி,துரத்தி, விரட்டி
உயங்கி - வருந்தி
அஃகுதல்(அஃகு- சுருங்கி) - நலிதல்,மெலிதல்,வாடுதல்
