குறுந்தொகை: பாடல் 347

குறுந்தொகை 347 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்

குமரி வாகைக் கோலுடை நறு வீ

மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்

கான நீள் இடை, தானும் நம்மொடு

ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,

நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

மல்குதல் - நிறைதல்

நல்குரவு - நீரின் மை குறித்து நின்றது

நல்கூர் சுரம் - நீரற்ற சுரம்

குமரி வாகை - இளமை உடைய வாகை

தோகை - மயில்

குடுமி - உச்சிக் கொண்டை

ஒன்று மணம் - புணர்தல்,மெய்யுறு புணர்ச்சி

நெஞ்சம் - அண்மை விளி

'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச்/

செய்வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு/

அம் மா அரிவையும் வருமோ?/

எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!(குறுந்.63)

உகாய்க்குடி கிழார்

'மறப்பு அரும் காதலி ஒழிய /

இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே (குறுந்.151:5-6)

மணத்தலும் தணத்தலும் இலமே;/

பிரியின் வாழ்தல் அதனினும் இலமே (குறுந்.168:6-7)

இன்னாக் கானமும் இனிய பொன்னொடு/

மணி மிடை அல்குல் மடந்தை/

அணி முலை ஆகம் முயங்கினம் செலினே(குறுந்.274:6-8)

நன்றி - http ://tamil concordance.in