குறுந்தொகை: பாடல் 349
குறுந்தொகை 349 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது.
பேயார்
நறை -மணம்
வயங்கிய -விளங்கிய
நளி -செறிவு
உறை -மழைத்துளி
அறு -அற்று
மை -மேகம்
பாக்கம் -சிற்றூர்
இனிது மன் (மன் இனிது) - மிகவும் இனிது
ஊங்கலங்கடையே - ஊங்கு+அல்+அம்+கடை+ஏ
ஊங்கு - மேலான,விட, சிறந்தது
அல்,அம் - சாரியை
ஏ - அசைநிலை
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய/பிறங்கு குரல் இறடி (குறுந்.214:1-2)
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவு *(காடு) (குறுந்.198:1)
முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர் (குறுந்.155:1)
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை/
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு (குறள்.32)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு (குறள். 122)
திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்/
பொருளும் அதனின்ஊங்கு இல் (குறள். 644)
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது/
உண்ணலின் ஊங்குஇனியது இல் (குறள். 1065)
நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்/
அல்லல் படுப்பதூஉம் இல் (குறள்.459)
நன்றி - http ://tamil concordance.in
