குறுந்தொகை: பாடல் 351

குறுந்தொகை 351 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்

அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த

ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென

உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு

உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்

புன்னை ஓங்கிய புலால்அம் சேரி

இன் நகை ஆயத்தாரோடு

இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?

தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, ''நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?''என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது.

அம்மூவன்

வளையோய் - விளி

இசின் - அசைநிலை

கொடுந்தாள் - வளைந்த கால்

அளை - வளை(நண்டின் வீடு)

அலவன் - நண்டு

அழுங்கல் ஊர் - அலர் தூற்றும் ஊர்

சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி/

அலவன் சிறுமனை சிதைய, புணரி/

குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்(குறுந்.328:1-3)

.....‌‌............முதுநீர்ப்

புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்/

இணர் விழ் புன்னை எக்கர் நீழல் (குறுந்.299:2-3)

பெருங் கடல்/உடை திரை ஒலி(குறுந்.303:2-3)

நன்றி - http ://tamil concordance.in