குறுந்தொகை: பாடல் 352
குறுந்தொகை 352 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது.
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நெடு நீர் - ஆழம் நிறை நீர்
அடை - இலை
புறம் - இலையின் பின் பகுதி
கொடு மென் சிறை - வளைந்த சிறகு
பறவை - வௌவால்
சாரல் - மலைப் பக்கம்
முன்னி - நினைத்து
சிறுபுன்மாலை (சிறிய+புன்மை+மாலை) - துன்பம் நிறை மாலை
தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை(குறுந்.172:1-2)
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் (அகம். 260:12)
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்/
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுது..(நற்.87:1-2)
..................சிறியிலைக்
குறுஞ் சினை வேம்பின்/ நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலை..
(ஐங்.339:1-3)
செல்லிய முயலிப் பாஅய சிறகர்,/
வாவல் உகக்கும் மாலை..(ஐங்.378:1-2)
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி (அகம்.244:1-3)
நன்றி - http ://tamil concordance.in
