குறுந்தொகை: பாடல் 354
குறுந்தொகை 354 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனை ஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ-
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
கயத்தூர் கிழான்
ஆர்ந்தோர் - ஆர்தல்,துய்த்தல்,உண்ணுதல்
தணந்தனை - பிரிவாய் எனில்
கொடுமோ - சேர்த்து விடு
அஞர் - வருத்தம், துயரம், அச்சம்
எவ்வம் - துன்பம்
விட்டென விடுக்கும் நாள் வருக அது நீ
நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ (குறுந்.236:1-2)
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே (குறுந்.238:4-5)
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
'தேம் பூங்கட்டி' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
ஐய!- அற்றால் அன்பின் பாலே(குறுந்.196)
மிளைக் கந்தன்
நன்றி - http ://tamil concordance.in
