குறுந்தொகை: பாடல் 355
குறுந்தொகை 355 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.
கபிலர்
பெயல் - முகில்
பட்டன்று - பட்டது,உண்டாயது
துஞ்சும் - தூங்கும்
பானாள்(பால்+நாள்) - நடுயாமம்
ஓகாரம், ஏகாரம் - அசைநிலைகள்
