குறுந்தொகை: பாடல் 356
குறுந்தொகை 356 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது.
கயமன்
ஆன்று - குறைந்து
கடுகுபு - கடுகி,விரைந்து
அறு சுனை - நீர் அற்ற சுனை
மருங்கின் - மருங்கு,பக்கம்
மறுகுபு - மறுகி,கொதித்து
கலுழி - கலங்கல் நீர்
தவ் என - ஒலிக் குறிப்பு
குடிக்கிய - குடிக்க
கொல்,தான்,ஏ - அசை நிலைகள்
ஏந்திய - செய்யிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
பல - மிகுதி
கோல் - திரட்சி
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொன் கலத்து ஒரு கை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூம் தலைச் சிறு கோல் (நற்.110:1-3)
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே (ஐங்.203)
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள் (நற்.184:1-3)
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய,
மலை முதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக - ஆகுக நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!(குறுந்.378)
-கயமனார்
குறுங் கால் மகன்றில் அன்ன
உடன் புணர் கொள்கைக் காதலோரே(ஐங்.381:4-5)
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே (ஐங்.386:1-2)
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே (அகம்.321:16-17)
கயமனார்
------------------------
பொரி :
ஓமைமரம்(79:2),கள்ளி(154:5),மாமரம்(255:2)
புன்க மலருக்கு உவமை:
53:4,341:2
பொருள்
பொரி - நெல் பொரி,மூங்கிலரிசிப் பொரி(தானியங்களின் பொரி),மரங்களின் பொரிந்த அடிப்பகுதி
** கயமன்/கயமனார் குறுந்தொகையில் 4 பாடல்கள்(9,35,376,396) பாடியுள்ளார்.அவற்றுள் 9 ஆவது பாடல் தவிர ஏனைய மூன்றும் உடன் போக்கு பற்றிய துறையில் உள்ளன.
நன்றி - http ://tamil concordance.in & Pongamia pinnata: https://indiabiodiversity.org/
