குறுந்தொகை: பாடல் 357
குறுந்தொகை 357 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது.
கபிலர்
முனி(முனிதல்) - வெறுத்தல்
படர் - துன்பம், வருத்தம்,நினைத்தல்
பாடு - தூக்கம்,துயில்
பனி - கண்ணீர்
கால் (போழ்ந்து) - கால் கொண்டு ஒழுகுதல்
போழ்ந்து - பிளந்து
பணை எழில் - மூங்கிலை ஒத்த அழகு
ஞெகிழ் - ஞெகிழ்ந்து, நெகிழ்ந்து
மேவர - மேவருதல், விருப்பம் வருதல்
மன்னிய - பொருந்திய
ஏனல் - தினைப்புனம்
சேணோன் -குறிஞ்சி நிலத்தில் வாழ்பவன், உயரமான பரணில் இருந்து தினைப்புனம் காப்பவன்
ஞெகிழி - தீப்பந்தம்,தீக் கொள்ளி
மீன் - விண்மீன்
சுடர் ஒளி - மிக்க ஒளி,மிகுந்த ஒளி
ஏனல் காவல் (நற்.102:9,128:7,389:6)
ஏனல் காவலர் (குறுந்.54:2,நற்.13:3,கலி.52:14)
ஏனலம் காவலர் (அகம்.12:6)
ஏனல் உழவர் (பதி.30:22)
மென் தினை நுவணை (பதி.30:24)
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே (நற் 31:12)
கபிலர்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே (குறுந். 357:8). - நக்கீரர்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் /மணவா முன்னும்......(அகம் 290:10 -12)
நக்கீரர்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (குறுந். 25:5)
நல் தோள் மணந்த ஞான்றை ....(குறுந். 36:4)
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே (குறுந். 50:5)
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே(குறுந்.68:4)
நன்றி - http ://tamil concordance.in
