குறுந்தொகை: பாடல் 361
குறுந்தொகை 361 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, ''நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.
கபிலர்
அம்ம - கேட்பித்தல்
உயர்நிலை உலகம் - வானுலகம்
சிறிதால்(சிறிது+ஆல்) - சிறியது
ஆல் - அசை
அவர் - சுட்டு
உந்தி - வெள்ளம்
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி
......
மலை கெழு நாடனை வரும் என்றோளே!(குறுந்.201:1,7)
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ.. (குறுந்.83:1-2)
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந்.75:3-4)
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்'
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே (குறுந்.228:3-6)
...................தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடும் குன்றே (குறுந்.240:5-7)
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே (குறுந்.367:6-7)
நன்றி - http ://tamil concordance.in
