குறுந்தொகை: பாடல் 363
குறுந்தொகை 363 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.
செல்லூர்க் கொற்றன்
ஏறு - விலங்குகளில் ஆண் பற்றிய பொதுப் பெயர் ;ஆண்பால் பெயர்
செங் கால் - சிவந்த தண்டு
பதவு - அறுகம் புல்
வார் குரல் - நீண்ட கதிர்
கறித்தல் - கடித்துத் தின்னுதல்
மரையா - மான் வகை
உகாஅய் - மரம்
இறத்தல் - கடத்தல்
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு/
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,/
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,/
செழும் பயறு கறிக்கும் புன் கண் மாலை (குறுந்.338:1-4)
வரி மரல் கறிக்கும் மடப் பிணை,
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே (அகம்.133:17-18)
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே
மெய்மலி உவகை ஆகின்று இவட்கே (நற்.43:6-7)
வரி நிழல்
--------------------
சிறுபாண்.12,மலைபடு.290,நற்.256:10,388:7,குறுந்.232:5,363:4,ஐங்.62:1,381:2,388:2,அகம்.121:9,165:1,287:12
நன்றி - http ://tamil concordance.in
