குறுந்தொகை: பாடல் 367

குறுந்தொகை 367 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்

தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,

உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-

தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்

பூசல் ஆயம் புகன்று இழி அருவி

மண்ணுறு மணியின் தோன்றும்

தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.

வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழிஉவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம்.

மதுரை மருதன் இளநாகன்

யாழ - முன்னிலை அசை

இறைய - வளைந்த

பெறீஇயர் - பெறுவாய்

உவக்காண் - அங்கு பார்

வந்திசினே - வா (இசின் அசைநிலை)

புகன்று - விரும்பி

துறுகல் - உருண்டைக் கல்

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,

திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து

நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே(குறுந்.228:3-6)

கண்டிசின் வாழி - தோழி! - தெண் திரைக்

கடல் ஆழ் கலத்தின் தோன்றி,

மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே(குறுந்.240:5 - 7)

நன்றி - http ://tamil concordance.in