குறுந்தொகை: பாடல் 369

குறுந்தொகை 369 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அத்த வாகை அமலை வால் நெற்று,

அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்

கோடை தூக்கும் கானம்

செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.

தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது.

குடவாயிற் கீரத்தனார்

அத்தம் - வழி

அமலை - அமல்,மிகுதி,நெருக்கம் திரள்

அரி - பரல்

சிலம்பு - அணிகலன்

அரிசி - வாகை நெற்றுள் உள்ள விதை

ஆர்ப்ப - ஒலி எழுப்ப,ஆரவாரம்

கோடை - மேல் காற்று

தூக்கும் - அலைக்கும்

கானம் - காடு

........ ஆரியர்

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னியோரே (குறுந்.7:3-6)

வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை அருஞ் சுரம்..(குறுந்.39:1-3)

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்

ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்

கோடை நீடிய அகன் பெரும் குன்றம் ...(அகம்.45:1-3)

வெள்ளிவீதியார்

நன்றி : https://www.kwai.com

நன்றி: iStock: Subas Chandra Mahato

நன்றி - http ://tamil concordance.in