குறுந்தொகை: பாடல் 370

குறுந்தொகை 370 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை

வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு

இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,

வில்லக விரலின் பொருந்தி; அவன்

நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

வில்லக விரலினார்

பொய்கை - இயற்கை நீர் நிலை

அணி - அழகு

கொழு முகை - கொழுத்த அரும்பு

மருங்கு - உடல் பொருட்டு நின்ற சொல்

அவன் - தலைவன்

சேரின் - தலைவன் தன் வீட்டுக்குச் சென்றால்

காந்தள் அம் கொழு முகை, காவல் செல்லாது,/

வண்டு வாய் திறக்கும் (குறுந்.365:1-2)

பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை/

வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரன் (குறுந்.370:1-2)

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி/

வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் (அகம்.183:11-12)

வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் (நற்.238:3)

நன்றி - http ://tamil concordance.in