குறுந்தொகை: பாடல் 371
குறுந்தொகை 371 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
உறையூர் முதுகூத்தன்
மை - முகில்
சிலம்பு - மலைப்பக்கம
ஐவனம் - மலை நெல்
காமமோ (காமம்+ ஓ) - 'ஓ ' வியப்பிடைச்சொல்
(மருவுதல்- ஒன்றாதல்,தழுவுதல்)
மருவேன் - ஒன்றேன்,தழுவேன்
ஐவனம்(6)
மலை. 115
குறுந்.100:1,371:2
ஐங்.267:3
புறம்.159:17,172:6
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.(குறள்.1253)
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறைஇறந்து மன்று படும்.(குறள்.1254)
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!(குறுந்18:4-5)
-கபிலர்
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.(குறள்.1161)
நன்றி - http ://tamil concordance.in
