குறுந்தொகை: பாடல் 374

குறுந்தொகை 374 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

எந்தையும் யாயும் உணரக் காட்டி

ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,

மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,

நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-

முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,

நீடு இரும் பெண்ணைத் தொடுத்த

கூடினும் மயங்கிய மையல் ஊரே.

அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.

உறையூர்ப் பல்காயனார்

எந்தை - என் தந்தை

யாய் - ஆய்,அம்மா, அன்னை

ஒளித்த செய்தி- தலைவியின் களவு மணம் / ஒழுக்கம்

வெற்பன் - மலைநாடன்

நன்று புரி கொள்கை - வரைவு உடன் படுதல்

ஒன்று(வினை.) - ஒன்றானது,ஒன்றாதல்

இறைய - இறகு

தூங்கு - தொங்கு

கணம் - கூட்டம்

குரீஇ - குருவி

மையல் - அறியாமை

இன் இசைப் பறையொடு வென்றி நுவலத்

தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப

ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி (புறம்.225:10-12)

ஆலத்தூர்க்கிழார்

நன்றி - http ://tamil concordance.in