குறுந்தொகை: பாடல் 375
குறுந்தொகை 375 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்
யாமம் காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.
வாழி - அசை நிலை
தொண்டகம் - குறிஞ்சிப்பறை
பானாள் - நடு இரவு
கறங்கும் - ஒலிக்கும்
அவியாமாறு - 'மாறு' இடைச்சொல்/காவல் மிகுதி/உறங்காமை
ஏ - அசை நிலை
