குறுந்தொகை: பாடல் 376
குறுந்தொகை 376 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலானே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.
படுமரத்து மோசிக்கொற்றன்
துன்னுதல் - அணுகுதல்
பொதியில் - பொதிய மலையில்
சூர் - தெய்வம்
அடுக்கம் - பக்க மலை
ஆரம் -சந்தனம்
தொகுப்ப - ஒருவழிச் சேர்த்தல்
ஐ - மெல்ல மெல்ல, பையப் பைய
வெயில் - வெம்மை
உள்ளத்து(உள்+அகம்+அத்து) - உள்ளே,உள்ளுக்குள்
ஆரம் நாறும் மார்பினன் (குறுந்.161:6,198:7)
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் (குறுந்.286:3)
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப (குறுந்.376:2)
நன்றி - http ://tamil concordance.in
