குறுந்தொகை: பாடல் 377

குறுந்தொகை 377 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,

வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,

மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-

அறிதற்கு அமையா நாடனொடு

செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.

மோசி கொற்றன்

மலர் - தாமரை மலர்

உண்கண் - மைதீட்டிய கண்

ஞெகிழ்ந்த - நெகிழ்ந்த

ஏர் மென் தோள் - அழகு

அடிக்கு

எண் இடுக கடைசியில்

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,/

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி/

அருவியின் விளைக்கும் நாடனொடு,/

மருவேன் - தோழி - அது காமமோ பெரிதே (குறுந்.371)

பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.(குறுந்.61:5-6)

அரும் பனி அற்சிரம் தீர்க்கும்

மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. (குறுந்.68:3-4)

மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-

அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,

பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,

கல் கெழு கானவர் நல்குறு மகளே.(குறுந்.71)

ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் குறுமகள்

நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;(குறுந்.70:1-2)

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே - சாரல்

கருங் கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (குறுந்.2)

நன்றி - http ://tamil concordance.in