குறுந்தொகை: பாடல் 378

குறுந்தொகை 378 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,

மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,

தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்

சுடர் வாய் நெடு வேற் காளையொடு

மட மா அரிவை போகிய சுரனே!

மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.

கயமனார்

படீஇய - படிந்து,கழிந்து

மலைமுதல் - மலையில்

தாஅய் - பரவி,நிறைந்து

தலைய - பெய்ய,பொழிய

சுடர்வாய் - ஒளி விடுகின்ற

அரிவை - இளம்பெண்

சுரன் - சுரம்(போலி)

பெரும் பெயல் தலைய (குறுந்.165:4)

தண் மழை தலைய ஆகுக (குறுந்.378:3)

செம்மறுத் தலைய (நற்.2:4)

கரும் பிடர்த் தலைய பெருஞ் செவிக் குறுமுயல் (புறம்.379:13)

விண்தோய் தலைய குன்றம் (புறம்.379:13)

குறுந்தொகையில் கயமனார் பாடல்கள்:

9,356,378,396(4)

நன்றி - http ://tamil concordance.in