குறுந்தொகை: பாடல் 381

குறுந்தொகை 381 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்

அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,

பசலை ஆகி, விளிவதுகொல்லோ-

வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,

பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,

விலங்கு திரை உடைதரும் துறைவனொடு

இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது

சாஅய் - மெலிந்து

அல்கல் - இரவு

நரலும் - ஒலி எழுப்பும்,கத்தும்

பொதும்பர் - மரங்கள் நிறைந்த சோலை

மயக்கி - கலக்கி

விலங்கு திரை - குறுக்கிடும் அலைகள்

நக்கது - சிரித்தது

(நகுதல்,சிரித்தல்,மகிழ்தல்)

சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்

தெற்றென இறீஇயரோ - ஐய! - மற்று யாம்

நும்மொடு நக்க வால் வெள் எயிறே (குறுந்.169:1-3)

அரிதே தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்

பெரிதே காமம், என் உயிர் தவச் சிறிதே (கலி.137:1-2)

அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே (கலி.137:7)

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.(குறள்.1090)

நன்றி - http ://tamil concordance.in