குறுந்தொகை: பாடல் 383
குறுந்தொகை 383 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
''இன்றை அளவைச் சென்றைக்க'' என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது.
படுமரத்து மோசி கீரன்
குறி - தோழி குறித்த இடம்
இன்றை அளவை - இன்று ஒரு நாள்
சென்றைக்க - கழியட்டும்
ஓய்வன - செயலறல்
ஒடுங்க - வருந்தி
இலை - இல்லை
