குறுந்தொகை: பாடல் 384

குறுந்தொகை 384 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

உழுந்துடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,

நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்

நலன் உண்டு துறத்தி ஆயின்,

மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.

''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.

ஓரம்போகியார்

கழுந்து - உழுந்து உடைக்கும் தடி (உழுந்து/உளுந்து உடைத்து உடைத்து வழவழப்பான தடி)

கரும்புடைப் பணைத் தோள் - தொய்யில் வரையப்பட்ட தோள்

குறுந்தொடி - சிறிய வளையல்