குறுந்தொகை: பாடல் 386

குறுந்தொகை 386 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

வெண் மணல் விரிந்த வீ ததை கானல்

தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,

வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்

மாலையோ அறிவேன் மன்னே; மாலை

நிலம் பரந்தன்ன புன்கணொடு

புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.

வெள்ளிவீதியார்

வீ - மலர்

ததை - செறிதல்

கானல் - கடற்கரைச் சோலை

தணத்தல் - பிரிதல்

வால் இழை - ஒளிமிக்க அணிகலன்

விழவு அணி - சிறந்த அணி, விழவுக்கான அணி

மன் - இரக்கம்

புன்கண் - துன்பம்,நோய்,மெலிவு

புலம்பு - தனிமை

'குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்/

பெரும் புலர் விடியலும் மாலை;

பகலும் மாலை - துணை இலோர்க்கே' (குறுந்.234:4-6)

சிறு புன் மாலை உண்மை

அறிவேன் - தோழி! அவர்க் காணா ஊங்கே (குறுந்.314:3)

புலம்பு கொள் மாலை (குறுந்.314:3)

படர் சுமந்து எழுதரு பையுள் மாலை (குறுந்.195:2)

தனியோர் இரங்கும் பனிகூர் மாலை (குறுந்.358:5)

கையற வந்த பையுள் மாலை (குறுந்.391:6)

எல்லை கழிய, முல்லை மலர,

கதிர் சினம் தணிந்த கையறு மாலை,

உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்,

எவன்கொல்! வாழி! - தோழி! -

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!(குறுந்.387)

கங்குல் வெள்ளத்தார்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன்.(குறள்.1226)

புன் கண் மாலை

-------------------------------

குறுந்தொகை

46:6,330:6,338:4,344:6,398:5

புன் கண் மாலை

நற்.73:4,89:11,117:7,162:3,215:3

அகம்.47:13,74:15,365:3

புறம்.65:8

நன்றி - http ://tamil concordance.in