குறுந்தொகை: பாடல் 387
குறுந்தொகை 387 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.
கங்குல் வெள்ளத்தார்
எல்லை - பகல்
கதிர் - ஞாயிறு,சூரியன்
சினம் - சூரிய ஒளியின் வெப்பம்
நீந்தினம் - கடந்தேம்
எவன் - யாது பயன்?
கொல் - அசைநிலை
கங்குல் வெள்ளம் - இரவாகிய வெள்ளம்
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி
மாலை மலரும்இந் நோய்.(குறள்.1227)
...........மாலை/ நிலம் பரந்தன்ன புன்கணொடு /
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே (குறுந்.386:4-6)
முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?/
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,/
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன் கொல்?-/
அலமரல் அசை வளி அலைப்ப, என்/
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே .(குறுந்.28)
ஔவையார்
நன்றி - http ://tamil concordance.in
