குறுந்தொகை: பாடல் 389

குறுந்தொகை 389 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நெய் கனி குறும்பூழ் காயம் ஆக

ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை-

பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்

''நன்றோ மகனே?'' என்றனென்;

''நன்றே போலும்'' என்று உரைத்தோனே.

தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.

வேட்ட கண்ணன்

குறும்பூழ் - சிறு பறவை

காயம் - குழம்பு

ஆர்பதம் - உண்ணும் சோறு

அத்தை - அசைநிலை

வரைந்தென - வரைவுக்குரியன செய்தல்

பெரும் பெயர் உலகம் (குறுந்.83:1-2)

அமிழ்தம் உண்க (குறுந்.83:1-2)

உயர்நிலை உலகமும் சிறிது(குறுந்.361:2)

நன்றி - http ://tamil concordance.in