குறுந்தொகை: பாடல் 390

குறுந்தொகை 390 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-

செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-

வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,

வளை அணி நெடு வேல் ஏந்தி,

மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுதும் செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது.

உறையூர் முதுகொற்றன்

எல் - ஞாயிறு,சூரியன்

எல்லின்று(எல்+இன்று) - ஒளி இல்லை,மறைந்தது

செல்லாதீம் - செல்லாதீர்கள்

சிறுபிடி - தலைவி (சிறு களிறு - தலைவன் என்பது பெறப்பட்டது)

வேற்று முனை - பகைப்புலம்

சாத்து - வணிகர் கூட்டம்

இறுத்தது - தங்கியது

மிளை - காவற்காடு,குறுங் காடு

தண்ணுமைக் குரல் - முரசு

பெரும்பாணாற்றுப்படை (அடிகள் 66 - 82 )

நன்றி - http ://tamil concordance.in