குறுந்தொகை: பாடல் 391
குறுந்தொகை 391 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே!
பிரிவிடை, ''பருவ வரவின்கண் ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது.
பொன்மணியார்
உவரி - வெறுத்து,உவர்த்து
ஒருத்தல் - ஆண் பன்றி
உழாஅது - நிலத்தைக் கிளைக்காமல்,தோண்டாமல்
புகரி - புள்ளி மான்
புழுங்கிய - வெப்பத்தால் புழுங்கிய(வறண்ட கானம்)
புயல் - மழை
புறவு - கானம்
பை - பாம்பின் படம்
வீழ்ந்தன்று - வீழ்ந்தது,பெய்தது
தழீஇ - பொருந்தி
தாஅம் - தாவும்,பாயும்
கூஉம் - கூவும்
மஞ்ஞை
-----------------
குறுந்தொகை
38:1,105:3,194:3,251:1,391:7
பை உடை இருந் தலை துமிக்கும் ஏறு (குறுந்.268:4)
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய (குறுந்.291:3)
உத்தி அரவின் பைந்தலை துமிய (அகம்.202:10)
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏறு ( அகம்.323:11)
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கை மடித்து உயவும் (குறுந்388:5-6)
நன்றி - http ://tamil concordance.in
