குறுந்தொகை: பாடல் 392
குறுந்தொகை 392 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
தும்பிசேர் கீரனார்
அம்ம,வாழியோ (வாழி+ஓ) - அசை நிலைகள்
கடவை - மான்
துடவை - தோட்டம்
துளர் -களைக் கொட்டு
துகள் - புழுதி
களைஞர் - தினைப்புனத் தில் களை எடுப்பவன்,
களையை நீக்குபவன்
செலல் -செல்லல்
தோல் - கிடுகு, கேடயம், கேடகம்,பரிசை,தடுப்பு ஆயுதம்
பிரசம் - தேனடை
தூங்கு - தொங்கும்
உழவர் தங்கை (சிறுபாண்.190)
கானவர் தங்கை (குறுந்.365:6,அகம்.132:5)
எயினர் தங்கை (ஐங்.363:2,364:1)
செல்வத் தங்கையர் (அகம்.320:3)
நன்றி - http ://tamil concordance.in
