குறுந்தொகை: பாடல் 396

குறுந்தொகை 396 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,

விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,

எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை

ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்

வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்

மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்

கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?

மகட் போக்கிய தாய் உரைத்தது.

கயமன்.

அயர்வோள்- விளையாடுபவள்

இனி - இப்பொழுது

முளி சினை - உலர்ந்த மரக் கிளை

உயர் கோட்டு - ஏந்திய மருப்பு

ஒருத்தல் - களிறு

வெவ் அறை - வெப்ப மிக்க பாறை

கவாஅன் - சரிவு, மலையடிவாரம்

கடுங் குரல் - முகில்களின் முழக்கம்

ஓர்க்கும் - காது கொடுத்துக் கேட்கும்

கழை - மூங்கில்

திரங்கு - உலர்ந்த மூங்கில்

ஆர் இடை- (செல்லுவதற்கு) அரிய வழி

செலவு - செல்லுதல்

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,

யானை கை மடித்து உயவும்

கானம்.(குறுந்.388:5-7)

ஔவையார்

கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்

போழ் புண் படுத்த பொரி அரை ஓமை (அகம்.397:10-11)

நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை (குறுந்.331:1)

நின் மகள்/பாலும் உண்ணாள்...(அகம்.48:1-2)

தேம் பெய்து/அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் (அகம்.89:19-20)

கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் (அகம்.49:1)

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (நற்.110:1)

பந்தாடு மகளிர் (ஐங்.295:5)

நன்றி - http ://tamil concordance.in