குறுந்தொகை: பாடல் 400
குறுந்தொகை 400 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
''சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு'' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ-
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.
பேயனார்
சேயாறு - நீண்ட வழி
களைகலம் -களைய மாட்டோம்
பெருந்தோள் -தலைவி தோள் (அன்மொழித் தொகை)
முரம்பு - பருக்கைக் கற்கள்
உடைய - நொறுங்கும் படி
கரம்பை - வண்டல் மண்
ஏகி - செல்லுதல்
நின் நயந்து உறைவி (ஐங்.273:4,309:3,நற்.168:7)
எம் நயந்து உறைவி (நற்.176:1)
இன்னாது உறைவி (அகம்.164:10,புறம்.145:10)
துஞ்சாது உறைவி (அகம்.298:23)
நம் நயந்து உறைவி (அகம்.379:1)
புள்ளுத் தொழுது உறைவி (அகம்.351:17)
நோய் நொந்து உறைவி (குறுந்.192:2,400:7)
சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்
நன்றி - http ://tamil concordance.in
