திருக்குறள்- 45. பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் 45. பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

45. பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்

___________________________________________________________

குறள் 442

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்

___________________________________________________________

குறள் 443

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்

___________________________________________________________

குறள் 444

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை

___________________________________________________________

குறள் 445

சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

___________________________________________________________

குறள் 446

தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்

___________________________________________________________

குறள் 447

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர்?

___________________________________________________________

குறள் 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

___________________________________________________________

குறள் 449

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்

சார்புஇலார்க்கு இல்லை நிலை

___________________________________________________________

குறள் 450

பல்லார்பகை கொளலின் பத்துஅடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்