திருக்குறள்- 57. வெருவந்த செய்யாமை

திருக்குறள் 57. வெருவந்த செய்யாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

57. வெருவந்த செய்யாமை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

562. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்

நீங்காமை வேண்டு பவர்

563. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

564. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்

565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து

566. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடுஇன்றி ஆங்கே கெடும்

567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்

568. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்

சீறின் சிறுகும் திரு

569. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்

570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லது

இல்லை நிலக்குப் பொறை