திருக்குறள்- 61. மடி இன்மை

திருக்குறள் 61. மடி இன்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

61. மடி இன்மை

601. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்

மாசுஊர மாய்ந்து கெடும்

602. மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்

603. மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து

604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு

605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

606. படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்

மாண்பயன் எய்தல் அரிது

607. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றி லவர்

608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்

609. குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடிஆண்மை மாற்றக் கெடும்

610. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு