திருக்குறள்- 63. இடுக்கண் அழியாமை

திருக்குறள் 63. இடுக்கண் அழியாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

63. இடுக்கண் அழியாமை

621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்

622. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்

623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்

624. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

625. அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்

626. அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று

ஓம்புதல் தேற்றா தவர்

627. இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்

628. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்

துன்பம் உறுதல் இலன்

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்

630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

ஒன்னார் விழையும் சிறப்பு