திருக்குறள்- 65. சொல்வன்மை

திருக்குறள் 65. சொல்வன்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

65. சொல்வன்மை

641. நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று

642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு

643. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்

644. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின்ஊங்கு இல்

645. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து

646. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசுஅற்றார் கோள்

647. சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது

648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

649. பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்

650. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துஉரையா தார்