திருக்குறள்- 67. வினைத்திட்பம்

திருக்குறள் 67. வினைத்திட்பம் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

67. வினைத்திட்பம்

661. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற

662. ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின்

ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்

663. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமம் தரும்

664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

665. வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறுஎய்தி உள்ளப் படும்

666. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து

668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கம் கடிந்து செயல்

669. துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி

இன்பம் பயக்கும் வினை

670. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு